Saturday 15 December 2012


வார்த்தைகள் ---நிஷா

உன் மனப்பாலுறுப்புக்களுக்கு 
கிளர்ச்சியூட்டுவைக்கும்
எவ்வித வார்த்தைகளும் 
இல்லை என்னிடம்

இவை உனக்கு நினைவூட்டலாம்
நீ மறைத்துவைத்திருக்கும் 
சில துரோகங்களை
சில அயோக்கியத்தனங்களை
சில பொய்ச் சத்தியங்களை
சில நன்றி மறத்தல்களை

அவை உன் கயமைத்தனத்தின்
புன்னகைகளை சாகடிக்கும்
வன்ம வார்த்தைகள் அல்ல
மாறாக 
சுய இரக்கத்தின் குற்ற உணர்ச்சியிலிருந்து
பீறிடும் வடிகால்கள்

மேலும்
உன் பிழைகளின் இருள் அறைகளில்
வெளிச்சமிட்டுக் காட்டும் 
என் வார்த்தைகள் 
உனக்கானவை மட்டுமல்ல
எனக்கானவையும்தான்..!!

2 comments: